நிகழ்நிலை (Online ) மூலமான பணப்பரிமாற்றம் அங்குராப்பண நிகழ்வு

நிகழ்நிலை(Online)  மூலமான பணப்பரிமாற்ற அங்குராப்பண நிகழ்வானது எமது மன்ற சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் வடமாகாண உள்ளுராட்சி திணைக்கள ஆணையாளர் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாண பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர், திட்ட இணைப்பாளர் மற்றும் வயம்ப அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர். இன்று முதல் வரியிறுப்பாளர்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் ஆதனவரியையும், பிறசேவைகளிற்கான கொடுப்பனவினையும் நிகழ்நிலை (Online) மூலமாக செலுத்தமுடியும்